தூத்துக்குடியை சேர்ந்த அமல்பட்டுராஜா (36),அந்தோணி கணபரதீஷ் (22) ஆகியவர்கள் கோவையிலுள்ள கணபதிசாலையில் வசித்து வருகின்றனர்.
இவர்களிடம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த அஸார் என்பவர் தனக்கு புகையிலைப் பொருட்கள் வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதனால் இன்று காலை கோயம்புத்தூரிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு மேற்கண்ட பொருட்களை Tn 99Q 3029 Heavy duty ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். இந்த வாகனத்திற்கு பாதுகாப்பாக தகவல் கூறும் விதமாக swift Dizire Tn01 BA2592 என்ற வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். உடுமலைப்பேட்டை அடைந்தவுடன் அசார் என்பவர் கிழக்கே பழனி ரோட்டில் நான் உள்ளது அதில் சென்று இறக்கிக் கொள்ளலாம் என்று அவரை மைவாடி பிரிவு கூட்டி வந்துள்ளார். அந்த இடத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் ஐயா அவர்களின் தனிப்பிரிவு குழு அவரை கைது செய்தனர்.
ரகசிய தகவல் அடிப்படையில், மைவாடி பிரிவில் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் இணைந்து, மடத்துக்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த
கனரக வாகனத்தில், சட்ட விரோத விற்பனைக்காக எடுத்துச் சென்ற 666 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-துல்கர்னி உடுமலை.