அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி!

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தர்மராஜ் (21). ஐடி ஊழியரான நேற்று மாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.அப்போது ஆர்.ஜி. புதூர் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து தர்மராஜ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறி விழுந்த தர்மராஜ் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறியது.இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அரசு பேருந்தை இயக்கி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ஓட்டுநர், சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி ஊழியர் அரசு பேருந்து விபத்தில் சிக்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளையும் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp