பொதுமக்கள் தினந்தோறும் பயண்படுத்தும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் காவலர் குடியிருப்பு அருகில் வீடு கட்டுமான வேலை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயண்படுத்தும் நடைபாதையின் நடுவில் எம் சேன்ட், மெட்டல் போன்ற கட்டுமாண பொருட்கள் கொட்டி நடைபாதை முழுவதும் மறித்து ஆக்கிரமித்துள்ளார்கள்,
இதனால் மருந்தகம் மற்றும் மருத்துவமனைக்கு வரும் மக்கள் மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்து காதர் குறிச்சி.