தூத்துக்குடி – நாகப்பட்டினம் 4 வழி சாலை அதிகாரி தகவல்!!

தூத்துக்குடி – நாகப்பட்டினம் இடையே ரூ.9ஆயிரம் கோடி மதிப்பில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய். ஏ. ராவுத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில் “தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி வரும் பிப்ரவரி மார்ச் மாதத்திற்கு முடிக்கப்படும், தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மேம்பால பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும் வல்லநாடு பாலத்தை சரி செய்யும் பணி 14 கோடி ரூபாய் செலவி பஸ் வருகிறது அவை விரைவாக முடிக்கப்படும்.

இந்த பணியானது அரசின் ஒப்புதலை பெறப்பட்டு செயல்படுத்தப்படும் இதன் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் இது சென்னைக்கு ஒரு மாற்று வழிச்சாலையாக இது அமையும். தூத்துக்குடி மதுரை இடையே விபத்துக்களை தவிர்க்கும் வகையில் 15 இடங்களில் மேம்பாலங்கள் வர உள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சங்க செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் எஸ், கே.எஸ். சி.தர்மராஜ், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தொழில் வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சேலம் இருந்து சென்னை நான்கு வழி சாலை பணிகள் விவாசய இடங்கள் பிரச்சினை இன்னும் சரியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp