கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முரளி. இவருக்கு நேற்று வீரபாண்டி பிரிவு பேருந்து நிலையம் பகுதியில் சட்ட விரோதமாக கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது, அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதான குணசேகரன் என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளையும்,
மூணு நம்பர் லாட்டரி என்று அழைக்கப்படும் லாட்டரிகளையும் வைத்திருந்ததை கண்டறிந்து, அவரிடம் இருந்து 3 கேரள மாநில லாட்டரி சீட்டுகளையும், 3ம் நம்பர் லாட்டரி எனப்படும் லாட்டரிக்கு பயண்படுத்தும் பில் புக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.