குறைந்த விலையில் செல்போன் தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி பணமோசடி!!

கோவை பந்தயசாலை, பகுதியில் வசித்து வருபவர் 59 வயதான நடராஜமூர்த்தி, இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது, அதில் https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இவருக்கு குறைந்த விலையில், செல்போன் பரிசாக விழுந்துள்ளது எனவும், அந்த செல்பொன் படமும் அனுப்ப பட்டு இருந்தது, இந்த செல்போன் , நடராஜமூர்த்திக்கு பிடித்துப் போகவே அதனுடன் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பு வழியாக ஆன்லைன் மூலம் 3 ஆயிரத்து 999 ரூபாய் செலுத்தினார், ஆனால் அதன் பிறகு பல நாட்களாகியும் அவருக்கு செல்போன் வரவில்லை பிறகு அந்த நிறுவனம் குறித்து விசாரித்த போது அது போலியான இணையதள நிறுவனம் என்பது தெரிய வந்தது , இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடராஜ மூர்த்தி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp