தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி அளவில் தொடங்கிய கூட்டம் நண்பகல் 2.30 வரை நடைபெற்றது. விவாசய துறை சார்ந்த மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை மற்றும் உத்தரவு பிறப்பித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பனை மரத்தின் பயன்கள், பதநீரை பதப்படுத்துதல், பனகூழ் தயாரிப்பு, பனகருப்பட்டி உற்பத்தி, பனைதேன் தயாரிப்பு ஆகியவை பற்றி விவசாயகளுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பேசியது: இந்த விவசாயகள் குறைதீர்க்கும் கூட்டம் என்பதற்கு பதிலாக விவாதம் கூட்டமாக நடை பெறுகிறது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022-ஆம் ஆண்டில் 48 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள தரிசு நிலங்களின் அடிப்படையில் 35 தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தரிசு நிலங்களில் 33 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பில் சொட்டுநீர்ப்பாசனம் நிறுவப்பட்டு நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022-2023-ஆம் ஆண்டில் இத்திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள தரிசு நிலங்களின் அடிப்படையில் இதுவரை 51 தரிசு நில தொகுப்புகள் கண்டறியபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது கூடுதலாக 1 தரிசு நில தொகுப்பு விளாத்திகுளம் வட்டாரத்தில் கண்டறியப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தங்கள் கிராம பகுதியில் தொடர்ந்து 3 ஆண்டு தரிசு நிலங்கள் தொகுப்பாக காணப்படும் பட்சத்தில் அதனை விளை நிலமாக மாற்றும் பொருட்டு ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் உச்சவரம்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான விவசாயகள் உடன்குடி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp