தேசிய அளவிலான சிறுநீரக சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது!
கோவை: இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி, மற்றும் கோயம்புத்தூர் நெப்ராலஜி அசோசியேஷன் சார்பாக, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் சிறுநீரக சிகிச்சை முறைகள் குறித்த மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்று வருகின்றது, தேசிய அளவில், 42 வது அகில இந்திய மாநாடாக நடைபெறும் இந்த மாநாடு 9ம்தேதி துவங்கியது, இம்மாநாடானது, வரும் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரண்டாவது நாளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறுநீரகங்கள், சார்ந்த அனைத்து விதமான தகவல்களையும் வெளிபடுத்தினர், சிறுநீரகங்களின் செயல்பாடுகள் குறித்தும், சிறுநீரகம் சார்ந்த மருத்துவ தேவைகளுக்கு இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சி குறித்து மாநாட்டில் பேசபட்டது, இந்த மாநாட்டில், மாநாட்டின், கௌரவ செயலாளர் மருத்துவர் பி. ரவி சங்கர், ஆண்டறிக்கையை வாசித்தார், இந்த மாநாட்டில், இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி அமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் குலாத்தி, மற்றும் மருத்துவர்கள், பிரபாகரன், செழியன், முருகானந்த், கௌதம் மற்றும் சரவணன் என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.