NTPL அனல்மின் நிலையத்தில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!
தூத்துக்குடி NTPL அனல்மின் நிலையத்தில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் NTPL நிறுவனமும், தமிழக மின் வாரியம் இணைந்து அனல் மின் நிலையம் அமைத்துள்ளன. இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கோரிக்கைகளை வலியுறத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல்மின் நிலைய கிளை (சிஐடியூ) சார்பில் சங்க செயலாளர் அப்பாத்துரை தலைமையில், நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சுமார் 200பேர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.