தூத்துக்குடியில் 2 பேரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்!!

தூத்துக்குடி

NALAIYA VARALARU

தூத்துக்குடியில் 2 பேரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரர் முத்துக்குமரனை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் ஓடைத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (30). இவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காளீஸ்வரியின் உறவினர்கள் தூத்துக்குடி மதுவிலக்கு போலீசில் ஏட்டாக பணியாற்றி வரும் கணபதி சுப்பிரமணியன் (48), காவலாளியாக பணியாற்றி வரும் பெரியவிநாயகம் (41) ஆகியோர் தட்டிக் கேட்டு உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன், ஏட்டு கணபதி சுப்பிரமணியன், பெரிய விநாயகம் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டினார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமரனை கைது செய்தனர். இந்நிலையில் முத்துக்குமரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp