எரியாத தெரு மின்விளக்குகளால் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் பொதுமக்கள்!!

வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்கு எரியவில்லை என்றால் என்ன செய்வது?

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை தெற்கு பிரிவு பஸ் நிலையம் அருகில் சமாதானபுரம் மற்றும் ஒத்தப்பாடி பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை மூன்று நாட்கள் ஆகியும் வால்பாறை நகராட்சி மின்விளக்கு அதிகாரிகளிடம் கூறியும் கண்டு கொள்வதில்லை இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை அப்பகுதி கவுன்சிலர் அவர்களிடம் முறையிட்டுள்ளனர் ஆனால் அவரும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் .

இதனால் அப்பகுதியில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமாய் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அப்பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது எனவே இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத தெரு மின்விளக்குகளை உடனடியாக சரி செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp