NALAIYA VARALARU
2 சக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்!
எதிரே வந்தவர் மருத்துவமனையில் அனுமதி!!
கோவை மாவட்டம் குறிச்சி அடுத்த சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான முருகேசன். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கோவை சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இவருக்கு நேர் எதிராக அதிக வேகமாக வந்த புல்லட் வாகனம் இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து முருகேசன் போத்தனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அளவுக்கு அதிகமான வேகத்தில் புல்லட்டை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான திவாகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.