இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 12’ ராக்கெட் மற்றும், ‘என்.வி.எஸ்., – 01’ செயற்கைக் கோளை சுமந்தபடி, இன்று காலை, 10:42 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும்.
ஜி.எஸ்.எல்.வி., – 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி., வகையில் இஸ்ரோ அனுப்பும், 15வது ராக்கெட். பூமியில் இருந்து இந்த ராக் கெட், செயற்கைகோள், எரிபொருள் உட்பட மொத்தம், 420 டன் எடையை சுமந்து செல்ல உள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.