உயிரிழந்த யானைக்கு மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறாய்வு!!
கோவை மாவட்டம் தடாகம் அடுத்த ஆனைகட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியபட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இன்று மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் வனச்சரக அலுவலர், வனவர், மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களான ஓசை குழுவை சேர்ந்தோர் சேம்புக்கரை வனக்குழு தலைவர் ஆகியோர் உடனிருக்க வனகால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யபட்டது.
பிரேத பரிசோதனையில் இறந்தது பெண் யானை எனவும், வயது 26-29 இருக்கலாம் எனவும், நுரையீரல் பாதிப்பினால் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பெண் யானையின் மண்டை யோட்டிலிருந்து இரு குறுந்தந்தங்களும் எடுக்கப்பட்டு, ஆய்வக சோதனைக்காக உடல் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் யானையின் உடலானது புதைக்கப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.