சாந்தி ஆசிரமம் நடத்தும் ஒற்றுமைக்கான பயணம் என்ற தலைப்பில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை கோவையில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைத்துச் சென்று மாணவ மாணவிகளுக்கு மத ஒற்றுமையைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கோவில், சர்ச், பள்ளிவாசல், இன்னும் புகழ்பெற்ற இடங்களில் மாணவ மாணவிகளை அழைத்து சென்றனர் சாந்தி ஆசிரமம் நிர்வாகிகள்.
இந்த நிகழ்வில் கோயமுத்தூர் பாரம்பரியம் மிக்க அத்தரர் ஜமாத் பள்ளிவாசலுக்கு நேற்று (21.6.23 )மதியம் 12 மணி அளவில் 14 பள்ளிக்கூடங்களில் இருந்து 85 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சாந்தி ஆசிரமம் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு சென்றனர் அவர்களை முழுமையாக பள்ளியின் நிர்வாகிகள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் வரலாறுகளையும் இஸ்லாமிய மத கோட்பாட்டுகளையும் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி அவர்கள் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் தலைவர் அமானுல்லா,முத்தவல்லி ஜாஃபர் அலி, பொருளாளர் அன்வர், கமிட்டி உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, யூசுப், இதயத்துல்லா,இப்ராஹிம் ராஜா, காஜா உசேன், மற்றும் மகாசபையாளர்கள் பள்ளியின் முகைதீன்கள்,Sioஅப்துல் அக்கீம், பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்விற்கு வந்திருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் சாந்தி ஆசிரம நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி அத்தார் ஜமாத் பள்ளி நிர்வாகிகள் கவுரவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.