குடிநீர் தட்டுப்பாடு குடிநீர் கேட்டு சாலைக்கு வந்த பொதுமக்கள்! – ஆனைமலையில் பரபரப்பு!!

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு குடிநீர் கேட்டு சாலைக்கு வந்த பொதுமக்கள்! – ஆனைமலையில் பரபரப்பு!!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட
வேட்டைக்காரன் புதூர் காளியாபுரம் பிரிவில் எம்.ஜி.ஆர் காலணியில் 750 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதிக்கு குடிநீர் வரவில்லை என கூறப்படும் நிலையில் இப்பகுதி பொதுமக்கள் சேத்துமடை காளியாபுரம் பிரிவில் இன்று காலையில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் ஈடுபட சம்பவ இடத்தில் ஒன்று கூடினர்.

சம்பவம் குறித்து விவரம் அறிந்த ஆனைமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை அடுத்து வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி அலுவலர்களுடன் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக கலந்து ஆலோசித்தனர்.

இதனை அடுத்து இன்றே குடிநீர் பிரச்சனையை தீர்வு காணும் வகையில் தண்ணீர் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காளியாபுரம் பிரிவில் ஒன்று கூடியதால் அப்பகுதி காலை வேளையில் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp