சட்ட விரோதமாக இயங்கி வரும் டென்ட் கேம்ப் அதிரடி நடவடிக்கை!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியை அருகிலுள்ள சின்ன கான கிராம பஞ்சாயத்து பகுதியில் கிட்டத்தட்ட 26 டென்ட் கேம்ப்கள் அனுமதி வாங்காமல் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டென்த் கேம்ப்கள் அனைத்தும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை கொடுத்து மயக்கம் மருந்துகளை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் இங்கு பல தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் மக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அது மட்டுமல்லாது அடர்ந்த காடுகள் என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இது சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் எனவும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னகாணல் பஞ்சாயத்து மூலமாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விரைவில் விசாரணை செய்து அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.