வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு!
பிளேடால் வெட்டிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் !!! கோவை அருகே டாஸ்மாக் கடை முன்பு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை பிளேடால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிட்கோ குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (47), டிரைவர். இவர் நேற்று சிட்கோ எல். ஐ. சி. , அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். மது அருந்தி விட்டு வெளியே நின்றிருந்தார்.
அப்போது அங்கு மது போதையில் வந்த நபர் ஒருவர் சீனிவாசனிடம் ஏன் நடுவழியில் நிற்கிறாய்? வழி விடமாட்டாயா என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் வைத்திருந்த பிளேடால் சீனிவாசனை கீறினார். அவருக்கு காது, கன்னம், கையில் காயம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வலியால் அவர் சத்தம் போட்டார். இதனால், பயந்துபோன அந்த மதுபோதை ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த சீனிவாசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், சீனிவாசனை பிளேடால் வெட்டியவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு குறிஞ்சி நகரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (55) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.