அவுட்டுக்காய் தேடும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்!!!

கோவை அருகே கடந்த 05-09-2023ம் தேதி கோவை வனச்சரகத்திற்குட்பட்ட நெம்பர் 11. வீரபாண்டி பகுதியில் அவுட்காய் கடித்ததால் வாயில் காயம் ஏற்பட்டு காட்டு‌யானை ஒன்று இறந்தது.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கட்டாஞ்சி மலை முதல் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட குழிக்காடு, சீலியூர், கூடலூர், மற்றும் கோவை வனச்சரகத்திற்குட்பட்ட தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, மருதமலை, கெம்பனூர் ஆகிய பகுதிகளில் வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்களிலும், சந்தேகபடும்படியான நபர்களின் தோட்டபகுதிகள் என சுமார் 35km தொலைவிற்கு வனத்துறை மோப்ப நாய் உதவியுடன் மேற்கண்ட வனச்சரக பணியாளர்கள் 45பேர் நான்கு நாட்களாக அவுட்காய் தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படுத்தபடும் அவுட்டுகாய்கள் எதுவும் தென்படவில்லை மேலும் தொடர்ந்து அப்பகுதிகளில் களப்பணியாளர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp