தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளத்தில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் 65 லட்சம் மதிப்பீட்டில் கொடியங்குளம் இருந்து என்.புதூர் செல்லும் சாலை அமைக்கும் பணியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து சவாலாப்பேரி தெற்கு காலனி, புளியம்பட்டி அருள் நகர் மற்றும் கீழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 63 கேவி புதிய மாற்றிகளையும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், துணை வட்டாட்சியர் ஸ்டாலின், பணி மேற்பார்வையாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் செல்வரேகா, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.