மூணாறில் கையகப்படுத்தப்பட்ட அரசு நிலங்கள் மீட்டெடுப்பு!!!

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் மூலமாக மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டது. 10 வருடங்களுக்கு முன்பதாகவே மூணார் சுற்றுலா தளத்தில் தங்கும்விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் பலரும் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து அருகில் உள்ள அரசு நிலத்தையும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதை அடுத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அரசு சில முயற்சிகளை எடுத்து பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அரசியல் எங்களை மீட்டெடுத்தது ஆனாலும் சில அரசியல் தலையிடர்களைக் கொண்டு சில முக்கிய புள்ளிகள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து உபயோகப்படுத்தி வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் தற்பொழுது மூணார் பகுதியில் சுமார் 86 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது பள்ளிவாசல் ஆனைச்சால் மற்றும் சின்னக்காணல் பஞ்சாயத்து போன்ற பகுதிகளில். சின்னகாணல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூணார் கேட்டரிங் காலேஜ் முதலியான டேசின் தச்சன்கரி என்பவர் ஆக்கிரமித்து இருந்த ஏழு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது அதில் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அரசு நிலத்தில் விடுதி கட்டப்பட்டுள்ளது 30 நாட்களில் விடுதியை காலி செய்து கொடுக்க வேண்டும் என அரசு கால அவகாசம் நிர்ணயித்துள்ளது. மட்டுமல்லாது முக்கிய புள்ளிகளின் செய்திகள் வெளிவரும் பொழுது ஊடகங்களும் மீடியாக்களும் அனுமதிக்கப்படுவதில்லை இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் முன்னெடுத்து அதனை வெளி உலகத்திற்கு தெரிவிக்கும் நிலையில் முக்கிய புள்ளிகளின் நிகழ்வுகள் மட்டும் மறைமுகமாக வைத்திருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp