தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்றும் கர்நாடக அரசே திமுக அரசே வஞ்சிக்காதே வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே என்றும் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்கின்றோம் என்றும் புதிய தமிழகம் கட்சியினர்கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செண்பக கனி வரவேற்புரை ஆற்றினார், தொகுதி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார், மாவட்டத் துணைச் செயலாளர் பரமசிவம் சிறப்புரை ஆற்றினார், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் காமராஜ் நன்றியுரை ஆற்றினார், முன்னாள் மாவட்டச் செயலாளர் லிங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் உமையனன், ஜெய வீரன், நகர செயலாளர் ஜெயமுருகன், உட்பட வேல்முருகன், ஜேம்ஸ், முனியசாமி, முருகன், தாவீது, முத்துப்பாண்டி, வீரச்செல்வம், மாரிச்செல்வம், உட்பட 30க்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.