கிணத்துக்கடவு அருகே விவசாயி தற்கொலை!!

கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக் கவுண்டனூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (56). தேவராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு தேவராஜ் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவி ஜெயமணியிடம் சண்டையிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று  குடிபோதையில் வந்த தேவராஜ் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி அருகில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயமணி உறவினருக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு டாக்டர்கள் தேவராஜ் உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp