மாநில அளவில் வென்ற பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்..!!

பொள்ளாச்சி :
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெரும் திரளாக பங்கேற்று அதில் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் இடையே கலை திறமைகளையும் தனித் திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அரசு சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா நிகழ்வு மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைப்பெற்றது. இதில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் பல்வேறு மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டும் விதமாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஆங்கில பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஐ.ரைஹான் அவர்களையும் இணைய கருத்துருவாக்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் முகம்மது அர்ஜான் அவர்களையும் தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று கல்வி சுற்றுலாவாக தென்கொரியா நாட்டிற்கு சென்று வந்த பத்தாம் வகுப்பு மாணவர் டி. பாலகணேஷ் அவர்களையும் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே .முருகேஷ் அவர்கள் தலைமை தாங்கி மூன்று மாணவர்களுக்கும் தலா ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்இளைஞர் பேரவை தலைவருமான ஆர். வெள்ளை நடராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பொள்ளாச்சி தமிழிசை சங்க நிர்வாகி சி. முரளிகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கேடயங்களையும் பொன்னாடையும் அணிவித்து அவர்களை வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துரை வழங்கியும் பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி வெற்றிபெற்ற மூன்று மாணவர்களுக்கும் வெள்ளி நாணயப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.மேலும் நகர மன்ற உறுப்பினர் எம் .கே. சாந்தலிங்கம்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுப்பிரமணியம் வி. எஸ் .ஆர். கே .மோகன். ஜே .கிட்டான் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் .முடிவில் பள்ளி ஆசிரியர் காஜா மொய்தீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp