ஓட்டப்பிடாரம் 61 பஞ்சாயத்து தற்காலிய கணினி ஆப்பரேட்டர்களுக்கு பணி நியமன ஆணையை யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் கிரி தலைமை தாங்கினார். அப்போது 61 பஞ்சாயத்துகளில் தற்காலிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு பணி நியமன ஆணையை ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் நிர்வாக மேலாளர் சுகந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைராஜ், பொன்னுசாமி, சந்திரா, இமாம் மற்றும் யூனியன் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.