கோவை மாவட்டம் வால்பாறை வட்டாரத்தில் உள்ள சென்னியப்பா எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் குழாய், குடிநீர் தொட்டி மற்றும் கிணறு ஆகியவை முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த குடிநீரை நம்பி இந்தப் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த குடிநீர் தொட்டி மற்றும் கிணற்றை பராமரிக்க பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கிணற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர். மேலும் கிணற்று அருகில் உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. சுமார் 200 குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த குடிநீர் கிணறு, தொட்டி, குடிநீர் குழாய் ஆகியவற்றை சீரமைத்து கிணற்றின் தடுப்புச் சுவரை மீண்டும் அமைத்து தரும்படி இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.