இந்தியாவுக்கு பெருமையை தேடித் தந்த தமிழக கால்பந்து இளம் வீரர் அகிலேஷ்க்கு வால்பாறையில் பாராட்டு விழா!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் S.அகிலேஷ் யூத் கேம்ப் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு மிக நேர்த்தியாக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக விளையாடி உள்ளார். இந்த இளம் வீரரின் செயலால் வால்பாறைக்கு மட்டுமின்றி கோவைக்கும் தமிழ்நாட்டுக்கும் அவ்வளவு ஏன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் இளம் வீரரின் குடும்பத்தாருக்கும், வால்பாறை கால்பந்தாட்ட சங்க நிர்வாகிகளுக்கு வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கம், தமிழக வணிகர் சம்மேளனம், வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பிஜேபி, மதிமுக, தேமுதிக,சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர், விஜய் ரசிகர் மன்றத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சமூக அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் இதனை அடுத்து இந்தியாவுக்கு பெருமையை தேடித் தந்த இளம் கால்பந்து வீரர் S.அகிலேஷ்க்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து மாலையும் பொன்னாடையும் அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கிய பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய கட்சித் தலைவர்கள் வால்பாறை கால்பந்து மைதானத்தை தமிழகத்துக்கு முன்மாதிரியான மைதானமாக இருக்க மைதானத்தை சரி செய்ய வேண்டும் விளையாட்டு வீரர்களுக்கு உரிய உபகரணங்கள் வாங்கித் தர வேண்டும். நமது பகுதியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களை உருவாக்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நகராட்சி மூலம் இலவசமாக உடற்பயிற்சி சாதனங்களும் விளையாட்டுக்குரிய உபகரணங்களும் வாங்கி கொடுத்து இளம் வயதிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் மத்திய மாநில அரசின் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசுவையில் மத்திய அரசு சார்பாக இளம் கால்பந்து வீரர் அகிலேஷ் க்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகையை நாங்கள்
பெற்று தந்து விட்டோம் மேலும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல மாநில அரசும் விளையாட்டுத்துறை மூலம் வழங்கக்கூடிய உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அகிலேஷின் வெற்றியை வால்பாறை ஒட்டுமொத்த மக்களும் விழா போன்று கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய வரலாறு வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்.                                                                                              -P.பரமசிவம் வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts