கோவை மாவட்டம் 22 வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி ரோடு பால்காரர் தோட்டம் என்ற இடத்தில் ரோட்டின் நடுவே குழி ஒன்று உள்ளது. தினந்தோறும் அதிகப்படியான இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முதல் குழந்தைகள் பெரியவர்கள் வரை அந்த வழியே சென்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சற்று கவனக்குறைவோடு வந்தால் உயிர் பழி நிச்சயம் என்கின்றனர். வாகன ஓட்டிகள். நாள் ஒன்றுக்கு இரு சக்கர வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர்.
அந்தக் குழியானது 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு அவர்களின் அலுவலகம் முன்பே இருப்பதாலும் இதை உடனடியாக மாமன்ற உறுப்பினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா.