தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ரா. சிவகாமி (பொ) அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆரைக்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பயிற்சியை பஞ்சாயத்து தலைவர் திருமதி . சங்கரி அவர்கள் தலைமையற்றார் அங்கக வேளாண்மை விவசாயிகள் பயிற்சியில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப வல்லுனர் திரு முத்துக்குமார் ஸ்காட் வாகைகுளம் அவர்கள் பயிற்சி அளித்தார் .
பின்னர் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் திருமதி. லலிதா பரணி அவர்கள் மண் பரிசோதனை மேற்கொள்ளும் முறைகளை எடுத்துரைத்தார். பின்னர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. சுபத்ரா அவர்கள் மண் அரிமாணத்தை தடுக்க உதவும் வெட்டிவேர் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை காணொளி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் உதவி தொழில் நுட்ப மேலாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் உழவன் செயலி பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சியை அட்மா அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.