விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் மூலம், இங்கிலாந்து அணி தற்போது இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதேநேரம், இரண்டாவது போட்டியில் வென்று தொடரில் வெற்றி கணக்கை தொடங்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு