தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் புகழ்பெற்றஎட்டையாபுரம் ஆட்டுச் சந்தை வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம், இந்த ஆட்டுச் சந்தைக்கு மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாரம்தோறும் சுமார் ஆயிரக்கணக்கான நாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம், இந்த ஆட்டுச் சந்தையை வைத்து அரசுக்கு வாரந்தோறும் பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது, ஆனால் இந்த ஆட்டுச் சந்தையில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆடுகளை கொண்டுவரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகம் எட்டையாபுரம் ஆட்டுச் சந்தைக்கு உரிய அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுகவினர் எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
விரைவில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகம் உரிய அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எட்டையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.