ஓட்டப்பிடாரம் அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் ஜெயராஜ்(67) இவர் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு ரஜினிகாந்த்(44), சுரேஷ்குமார்(40) ஆகிய மகன்கள் உள்ளனர். இரு மகன்களுக்கு திருமணமாகி அதே ஊரில் வாழ்ந்து வருகின்றனர். இளைய மகன் சுரேஷ்குமாருடன் தாய் வசந்தா வாழ்ந்து வருகிறார். ஜெயராஜ் பணி ஓய்வு பெறும் போது கிடைத்த பணத்தை குடும்பத்திற்கு கொடுக்காமல் செலவு செய்து அண்ணன் மகன் வீட்டில் வாழ்ந்து வருலதாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் நேற்று காலை இளைய மகன் தந்தையே கூப்பிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தபோது மனைவியும் இளைய மகனும் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திற்கு கணக்கு கேட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டன. இதில் ஆத்திரமடைந்த மனைவி வசந்தா, இளைய மகன் சுரேஷ்குமார் ஆகியோர் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தலையில் போட்டுள்ளனர். இதில் ஜெயராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஓட்டப்பிடாரம் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தலை நசுக்கி இறந்து கிடந்த ஜெயராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தனர். விசாரணையில் ஜெயராஜ் மனைவி வசந்தா, இளைய மகன் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.