கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தற்பொழுது காட்டு யானைகள் அதிகளவு இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் வால்பாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்குள் காட்டி யானைகள் வருவது அதிகரித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் அருகில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் உலா வருகின்றன. அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் சத்துணவு கூட்டங்களை உடைத்து அங்குள்ள பொருட்களை எடுத்து சூறையாடியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்தப் பகுதியில் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலாஜி கோவில் பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் பள்ளி வளாகமும் உள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.