கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகின்றன எனவே வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன இதனால் மனித வன விலங்குகள் மோதல் ஏற்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறையை அடுத்து உள்ள நடுமலை தெற்கு பிரிவு பகுதியில் நேற்று இரவு ஒற்றைய யானை ஒன்று புகுந்து அப்பகுதியில் உள்ள மாடசாமி திருக்கோயிலை சேதப்படுத்தியது. நேற்று இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் சிறுகுன்றா பகுதியில் இருந்து நடுமலை தெற்கு பிரிவு பகுதிக்கு வந்த ஒற்றை யானை அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைய முயன்றது அங்குள்ள பொதுமக்கள் அதனை விரட்டி விட்டனர் அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாடசாமி கோயில் மேலே வைத்திருந்த பிளாஸ்டிக் ட்ரம்மை கீழே தள்ளி விட்டது அதன் சட்டத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த யானையை விரட்டினர் பின்பு அந்த யானை பச்சை மலை பகுதிக்குள் சென்றது இதனால் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.