கோவில்பட்டியில் பட்டியல் இனம் மாணவி மீது வன்கொடுமை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஆ.ராசா க்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கடப்பூர் ராஜு அவர்கள்.
தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையம் எதிரில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்டம் அவைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.
இது ஆர்ப்பாட்டத்தில் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு பேசியது;
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது தினமும் செய்தித்தாள் தொலைக்காட்சியை பார்த்தால் பயமாக இருக்கிறது. அதேபோலத்தான் சென்னையில் பட்டியல் இனம் மாணவிகளுக்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. உயர் கல்வியை முடித்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்ற மாணவிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை எந்த பத்திரிகை ஊடகங்களும் அதைப்பற்றி ஏன் வாய் திறப்பதில்லை என கடுமையாக சாடினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீட் பிரச்சினையால் இறந்த அனிதா வீட்டுக்கு சென்ற உதயநிதி கனிமொழி ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை . வழக்கு பதிவு என்பது காவல் துறையினர் இயல்பான வேலை அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி தவறாக பேசிய ஆ.ராஜா அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மாவட்ட செயலாளர் சத்யா பேச்சியம்மாள் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் நகர செயலாளர் விஜயா பாண்டியன் மருத்துவர்கள் அணி செயலாளர் கோமல் வழக்கறிஞர்கள் பிரிவு ஈஸ்வரமூர்த்தி பரமசிவன் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் வண்டானம் கருப்புசாமி முடுக்காலன்குளம் சாமிராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் SR சின்னத்துரை ஒட்டப்பிடாரம் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் அம்மா பேரவை செயலாளர் கண்ணன் ஒட்டப்பிடாரம் மாணவர் அணி செயலாளர் பல்சர் மணி உட்பட்ட 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.