பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட ஆட்சியர், வால்பாறை வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ( மார்க்சிஸ்ட் ) சார்பாக கோரிக்கை மனு!!

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட ஆட்சியர், வால்பாறை வட்டாட்சியர் உள்ளிட்டோருக்குவால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ( மார்க்சிஸ்ட் ) சார்பாக செயலாளர் P.பரமசிவம் கோரிக்கை மனு.

மனுவில் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய வட்டாட்சியர் அவர்களுக்கும் எங்கள் அமைப்பின் சார்பாக பணிவான வணக்கம்.

குறைந்த சம்பளத்தில் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரியும் ஏழை, எளிய தொழிலாளர்கள் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு எளிதில் உயிர்காக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை வழங்கியமைக்கு தாங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பயனடைந்தவர்களை போலவே இன்னும் பயனடையாமல் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு வால்பாறை மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிப்பு கொடுத்து உயிர்காக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை எடுப்பதற்கு வால்பாறை அல்லது அந்தந்த எஸ்டேட் பகுதிகளில் முகாம் அமைக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

காப்பீட்டு அட்டை தொடர்பாக ஒரு சிலர் வால்பாறை சமூக வலைத்தளங்களில் 04.02.2024-ம் தேதி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுவதாக செய்தி பதிவிட்டு ஏராளமான பயனாளிகள் காலை முதல் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்கு ஒருவரும் இல்லை. முகாமும் நடைபெறவில்லை என்பதை தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை கருத்தில் கொண்டு முகாம் எப்பொழுது நடைபெறுகிறது என்பதை சம்மந்தப்பட்ட துறை மூலம் முன்னதாகவே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து P.பரமசிவம் கூறுகையில் மக்களின் நலனை நோக்கித்தான் என்னுடைய சிந்தனை செயல்பாடு இருக்கிறது இதில் மாற்று கருத்து கிடையாது அதன் அடிப்படையில் தான் இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது மனுவின் உண்மைத்தன்மையே ஆராய்ந்து மக்களின் நலனை கருத்தில் எடுத்துக் கொண்டு காலதாமதம் செய்யாமல் விரைந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு மட்டுமல்ல மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான் என்றார்.

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp