முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மாபெரும் கபாடி போட்டி ஏற்பாடுகள் அனைத்தும் கீழஈரால் இரா.செல்வம் ஒன்றிய செயலாளர் தொடர்ந்து 10 ஆண்டுகள் போட்டியை நடத்தி வருகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது, இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடினர், இந்த மாபெரும் கபடி போட்டியை தமிழக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு காபடி வீரர்களுக்கு கை கொடுத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் முதல் பரிசு ரூபாய் . 20076 இலக்கிய அணி செயலாளர் சின்னப்பன் அவர்கள் வழங்கினார் 2வது பரிசு ரூபாய்.15076 நீலகண்டன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அன்புராஜ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் செயலாளர் வழங்கினார் 3வது ரூபாய் .10076 பரிசு கவியரசன் தூத்துக்குடி மாவட்டம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இளையர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் கவியரசன் அதிமுக எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், மகேஷ், பால்ராஜ், கீழ ஈரால் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.