கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் பழுதான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால்
பயணிகளும், ஓட்டுனர்களும், நடத்துனர்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சி ஐ டி யு சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கோரிக்கையை ஏற்று பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி திருப்பூர் வழியாக சேலத்திற்கு புதிய பேருந்து நேற்று முதல் இயக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை அரசு போக்குவரத்து கழக மேலாளர், திமுக நகரச் செயலாளர் சுதாகர் என்கிற குட்டி, துணைச் செயலாளர் சரவண பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தமிழக முதல்வருக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும்,மாவட்ட செயலாளர்களுக்கும், கிளை மேலாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் கூறுகையில் இச்செய்தியை அரசு அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற நாளைய வரலாறு செய்தி நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும், போக்குவரத்து கழக கோவை மாவட்ட பொது மேலாளருக்கும், வால்பாறை கிளை மேலாளருக்கும், வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் என்கிற குட்டி மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் வால்பாறை மலைப்பகுதிகளில்
இயங்கிக் கொண்டிருக்கின்றபழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தனர்.
-M.சுரேஷ் குமார்.