தனித்திறன் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்!!!
விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் புதிய நூலகத்தை திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,ஸஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கினார்கள்.
உடன் கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தரராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணை தலைவர்,பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம், வார்டு செயலாளர்கள் சுப்புராஜ்,ஸ்டாலின்கென்னடி,அய்யனார், தமிழரசன், லெனின்,தாளமாணிக்கம் வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி, குறிஞ்சி, கலைச்செல்வி செண்பகராஜ் முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வரவேற்புரை முனைவர் கஸ்தூரி, நன்றியுரை முனைவர் மங்கையர்கரசி, நிகழ்ச்சி தொகுப்பு முதுமுனைவர் ஐயப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.