தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரம் கிராம விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் மாநில அளவிலான விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கு கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் வயல்வெளி பள்ளிகள் வழங்கபட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் ரா.சிவகாமி தலைமையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூன்றாம் தவணை நிதியின் கீழ் அட்மா சார்பில் விவசாயிகளுக்கு திருமதி குமாரி வினோதினி அவர்கள் மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகளையும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் வயல்வெளி பள்ளி பற்றி எடுத்துரைத்தார்.
பின்னர் வீரனன் அருணகிரி அவர்கள் அறுவடை பிந்தைய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர் பேக்கரி யூனிட்டுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டு திருமதி பத்மாவதி அவர்கள் சிறுதானியங்களில் லட்டு பிஸ்கட் செய்யும் முறைகளை எடுத்துரைத்தார் இக் இக்கல்வி சுற்றுலா நிகழ்வுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வகுமார் மற்றும் மங்கையர்க்கரசி சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.