கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா அடுத்துள்ள குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் தற்போது ஒற்றை யானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த ஒற்றை யானை சாலை அருகே நின்று கொண்டு அவளையே வரும் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து வழிமறித்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் வரும் பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது இரவு நேரங்களில் அவ்வழியே வரும் வாகனங்களை இந்த ஒற்றை யானை வழி மரிப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.