கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024 பூதப்பாண்டி பேரூராட்சி துவரங்காடு பகுதியில் கிராம அலுவலகம் அருகில் தகர கொட்டகை அமைக்க ரூபாய் 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 13.3.2024 அன்று மாண்புமிகு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், இ.சாந்தினி பகவதியப்பன்,தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்சுந்தர்நாத், கழக பொதுக்குழு உறுப்பினர் கே.மகராஜன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் S.C வெங்கடேஷ், பேரூராட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கன்னியாகுமரி,
-இந்திரன்.