கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது இதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் வடசேரி மற்றும் ஆரல்வாய்மொழியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் போராட்டத்திற்கு கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம் எல். ஏ தலைமை தாங்கினார், பகுதி செயலாளர் ஸ்ரீலஜா முன்னிலை வகித்தார் மேலும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி எம் ஜி ஆர் சிலை முதல் அண்ணா ஸ்டேடியம் தாண்டியும் கைகளை கோர்த்தபடி வரிசையாக நின்றனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சுகுமார், இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் லதா சந்திரன், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், மாவட்ட கவுன்சிலர் ஜான்சிலின் விஜிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
கன்னியாகுமரி,
-P.இந்திரன்.