தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வழங்கி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் திமுக கட்சியின் வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.
இதனால் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் இன்று பரபரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.