கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பரிசுத்த நாட்களுக்கு துவக்கம் குறித்து கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு அனுசரித்தனர். கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் என்னும் பைபிளில் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தாராம். அப்போது, இயேசு ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்து மனித குலத்துக்குத் தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது. பரிசுத்த வாரத்திற்கு துவக்கம் குறித்து கிறிஸ்தவ சமூகம் ஓசானா ஞாயிறு கொண்டாடின. மூணாறு விஜயபுரம் மறை மாவட்டத்தின் கீழே உள்ள எல்லப்பட்டி பங்கு மற்றும் அனைத்து கிளை பங்குகளிலும் ஓசோன ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. எல்லப்பட்டி தேவாலயத்தின் பங்குத்தந்தை அலெக்ஸாண்டர் மற்றும் துணை பங்கு தந்தை டின்டோ தலைமையில் கிளை பங்குகளிலும் ஓசோனா ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. எல்லப்பட்டி கிளை பங்குகள் ஆன குண்டலை, செண்டுவாரை, பழத்தோட்டம், டாப் ஸ்டேஷன், அருவிக்காடு போன்ற பகுதிகள் உட்படும். அனைத்து தேவாலயங்களிலும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ விசுவாசிகள், ஓலைகளை கையில் பிடிக்கும் பங்கெடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா.