தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு யூனியன் கூட்ட அரங்கில் வைத்து நடந்தது. பயிற்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி தலைமையில் தொடங்கி வைத்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள் எந்த வித பாகுபாடு இன்றி வாக்காளர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பயிற்சியின் போது தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, ஒட்டப்பிடாரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாணகுமார், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு தாசில்தார் செல்வகுமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்புசாமி மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.