ஓட்டப்பிடாரம், பசுவந்தனை கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் கயத்தார் மன்னராலும் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராலும் அதனைத் தொடர்ந்து எட்டப்ப நாயக்க மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவில் ஆகும்.

இக்கோவில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கொடிமரம் மற்றும் நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேஷ் தலைமையில் 11.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டன. தொடர்ந்து கொடிமரம் மற்றும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவின்போது பசுவந்தனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் சார்பில் காலை 8 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ஊரின் வீதி வழியாக சப்பர வீதி உலா நடக்கிறது. 9.வது திருவிழாவான 22.ந்தேதி திங்கள் கிழமை தேரோட்டம் நடக்கிறது. 10.வது திருவிழாவான 23.ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும், 11.வது திருவிழாவான 24.ந்தேதி சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேஷ், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பத்மா, பஞ்சாயத்து தலைவர்கள் லட்சுமி சிதம்பரம், ஆறுமுகபாண்டி, யூனியன் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் உட்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஓட்டப்பிடாரம் அகிலாண்டேஸ்வரி அம்மாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கொடிமரம் மற்றும் நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனை 10 மணிக்கு கொடி ஏற்றப்பட்டன.

தொடர்ந்து கொடிமரம் மற்றும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. விழாவின்போது பசுவந்தனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் சார்பில் காலை 9 மணிக்கு மற்றும் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் ஊரின் வீதி வழியாக சப்பர வீதி உலா நடக்கிறது. 9.வது திருவிழாவான 22.ந்தேதி திங்கள் கிழமை மிதுன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது.

10.வது திருவிழாவான 23.ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும், 11.வது திருவிழாவான 24.ந்தேதி சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முப்புடாதி என்ற திவ்யா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp