தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராதால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு விபதியால் நாமம் போட்டு நூதான போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் முறையான சாலை வசதி கழிவு நீர் கால்வாய் போதுமான தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் பலமுறை கோரிக்க மனுக்களை அழித்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து தராமல் தொடர்ந்து அதிகாரிகளால் அப்பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் துரைராஜ் நகரை சேர்ந்த மக்கள் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தேர்தல் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை அரசியல் கட்சியின் நுழைய அனுமதி இல்லை என்று தேர்தலை புறக்கணித்து பேனர் வைத்துள்ளனர் அது மட்டும் இன்றி தங்களுக்கு பகுதியில் அரசு எதுவும் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் உறுதியால் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு கருப்பு கொடிகளை ஏந்தியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.