கோவை மாவட்டம் பொள்ளாச்சி வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள்பகுதி களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்து காணப்படும்.
தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ் வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும்.
இதேபோல, மே 7-ந் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-M.சுரேஷ்குமார்.