கோயம்புத்தூர் போத்தனூர் எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் ஹசன் மகன் அஸ்ரப்(19). இவரது மூத்த சகோதரர் ஹக்கீம்(22). இவருக்கும் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதற்கிடையே ஹக்கீம் அந்த இளம்பெண்ணை திருப்பூர் அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ஹக்கீம் குடும்பத்தினருக்கும், இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், சம்பவதினத்தன்று அஸ்ரப் போத்தனூர் குருசாமி பிள்ளை தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேர் கும்பல் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அவரது அண்ணன் ஹக்கீம் எங்கே என கேட்டு அஸ்ரப்பை அரிவாளால் வெட்டினர்.
உடலில் பலத்த காயமடைந்த அஸ்ரப்பை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், அஸ்ரப்பை அரிவாளால் வெட்டியது ஹக்கீம் காதலித்த இளம்பெண்ணின் அண்ணன் சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டை சேர்ந்த யுகேந்திரன்(19), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் நண்பர்கள் 17 வயதுடைய 2 சிறுவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த தேவேந்திரன்(20) என்பது தெரியவந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.